அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Monday, December 17, 2012

முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 7

முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 1 படிக்க இங்கே அழுத்தவும்
முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 2 படிக்க இங்கே அழுத்தவும்
முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 3 படிக்க இங்கே அழுத்தவும்
முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 4 படிக்க இங்கே அழுத்தவும்
முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 5 படிக்க இங்கே அழுத்தவும்
 முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 6 படிக்க இங்கே அழுத்தவும் 


புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 1 படிக்க இங்கே அழுத்தவும்
   புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 2 படிக்க இங்கே அழுத்தவும்
   
   புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 3 படிக்க இங்கே அழுத்தவும்   


முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 7

முரண்பாடு : 29

தாவீது சீரியரில் எத்தனைப்பேரைக் கொன்று போட்டான்?

சீரியர் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்தோடினார்கள் தாவீது சீரியரில் ஏழாயிரம் இரதங்களின் மனுஷரையும், நாற்பதினாயிரம் காலாட்களையும் கொன்று, படைத்தலைவனாகிய சோப்பாக்கையும் கொன்றான். – 1 நாளாகமம் 19:18

இந்த வசனத்தில் தாவீது சீரியரில் 7000 இரதங்களின் மனுஷரையும் 40000 காலாட்களையும் கொன்று போட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் இதற்கு மாற்றமாக 2 சாமுவேலில் பின்வருமாறு கூறப்படுகின்றது.

சீரியர் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்தோடினார்கள். தாவீது சீரியரில் எழுநூறு இரதவீரரையும் நாற்பதினாயிரம் குதிரைவீரரையும் கொன்று, அவர்களுடைய படைத் தலைவனாகிய சோபாகையும் சாகும்படி வெட்டிப்போட்டான்
- 2 சாமுவேல் 10:18

இந்த வசனத்தில் தாவீது சீரியரில் 700 இரதவீரரையும் 40000 குதிரைவீரரையும் கொண்றதாகவும் கூறப்படுகின்றது. இதில் யார் சொல்வது சரி? தாவீது கொன்று போட்டது 700 இரதவீரர்களையா அல்லது 7000 இரதவீரர்களையா? 40000 குதிரை வீரரையா அல்லது 40000 காலாட்களையா? பைபிள் பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டு எழுதப்பட்டிருந்தால் இப்படிப்பட்ட முரண்வருமா? சிந்தியுங்கள் கிறிஸ்தவர்களே!


முரண்பாடு : 30

பாஷா அரசாண்டது எத்தனை வருடங்கள்?

யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் வருஷத்திலே அகியாவின் குமாரனாகிய பாஷா, இஸ்ரவேலனைத்தின் மேலும் திர்சாவிலே ராஜாவாகி இருபத்து நாலு வருஷம் ஆண்டு, - 1 இராஜாக்கள் 15:33

பாஷா தன் பிதாக்களோடே நித்திரையடைந்து திர்சாவில் அடக்கம்பண்ணப்பட்டான் அவன் குமாரனாகிய ஏலா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். – 1 இராஜாக்கள் 16:6

ஆசா என்பவன் யூதாவுக்கு ராஜாவாகிய 3ம் வருடத்தில் பாஷா என்பவன் இஸ்ரவேலருக்கு ராஜாவானதாகவும் 24 ஆண்டுகள் அவன் ஆண்டதாகவும் மேலே உள்ள 15:33ம் வசனம் குறிப்பிடுகின்றது. அவன் அரசனாகவே மரணமடைந்த உடன் அவன் மகன் ராஜாவானதாக 16:6ம் வசனம் குறிப்பிடுகின்றது.

யூதாவுக்கு ஆசா ராஜாவான 3ம் வருடம் பாஷா ஆட்சிக்கு வந்து 24 வருடங்கள் ஆட்சிசெய்து மரணித்திருக்கின்றான். அதாவது ஆசா யூதாவுக்கு ராஜாவானது முதல் 27 (24+3) ஆண்டுகள் பாஷா வாழ்ந்திருக்கின்றான். இதை கவனத்தில் கொண்டு பின் வரும் வசனத்தைப் படியுங்கள்.

ஆசா அரசாண்ட முப்பத்தாறாம் வருஷத்திலே, இஸ்ரவேலன் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாய் வந்து, ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் போக்கும் வரத்துமாயிராதபடிக்கு ராமாவைக் கட்டினான். – 2 நாளாகமம் 16:1

ஆசா அரசாண்ட 27 ஆம் வருடம் மரணித்து விட்ட பாஷா என்பவன், ஆசா அரசாண்ட 36ம் ஆண்டில் எப்படி அரண் கட்டினான்? ஒரு வேளை அவனும் உயிர்ததெழுந்தான் என்று கிறிஸ்தவ உலகம் சொல்லப்போகின்றதா?

முரண்பாடு : 31

மலடி பிள்ளை பெற்றாளா?

சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தான் மரணமடையும் நாள் வரை பிள்iயே பெறாமல் மரணித்ததாக பைபிளின் 2 சாமுவேல் கூறுகின்றது:

அதினால் சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு மரணமடையும் நாள்மட்டும் பிள்ளை இல்லாதிருந்தது. – 2 சாமுவேல் 6:23

இந்த வசனத்தில் மிகத் தெளிவாக சவுலின் குமாரத்திக்கு அவள் மரணமடையும் நாள் வரை பிள்ளையே இல்லாமல் மரணித்தாள் என்று கூறப்பட்டிருக்க இந்த வசனத்திற்கு நேர் மாற்றமாக சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு 5 குமாரர்கள் இருந்ததாக பைபிளின் 2 சாமுவேல் 21:8 கூறுகின்றது:

...சவுலின் குமாரத்தியாகிய மீகாள் மேகோலாத்தியனான பர்சிலாவின் குமாரனாகிய ஆதரியேலுக்குப் பெற்ற அவளுடைய ஐந்து குமாரரையும் பிடித்து, - 2 சாமுவேல் 21:8

சவுலின் குமாரத்திக்கு பிள்ளைகள் இருந்ததா? அல்லது பிள்ளையே இல்லாமல் மரணித்தாளா?
முரண்பாடுகள் தொடரும்...இறைவன் நாடினால்

0 comments: