அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!
Showing posts with label பொருந்தாத போதனைகள். Show all posts
Showing posts with label பொருந்தாத போதனைகள். Show all posts

Thursday, July 17, 2008

வீட்டுக்கும் குஷ்டரோகம் வருமாம்! - பைபிள் ஜோக்ஸ்

பைபிளில் முரண்பாடான வசனங்கள், ஆபாசமான வசனங்கள் என்று இருப்பது போன்று ஜோக்கான வசனங்களும் நிறைய கானக்கிடைக்கின்றன.

நாம் உடுத்தும் ஆடைகளுக்கு குஷ்டரோகம் வரும் என்று உளரிவைத்தவர்கள் அடுத்து வீட்டுக்கும் குஷ்டரோகம் வரும் என்று கடவுளின் பெயரால் பைபிளில் உளரிவைத்துள்ளதைப் பாருங்கள்:

நான் உங்களுக்குக் காணியாட்சியாகக் கொடுக்கும் கானான் தேசத்திலே நீங்கள் போய்ச் சேர்ந்தபின்பு, உங்கள் காணியாட்சியான தேசத்தில் ஒரு வீட்டிலே குஷ்டதோஷத்தை நான் வரப்பண்ணினால், அந்த வீட்டிற்கு உடையவன் வந்து, வீட்டிலே தோஷம் வந்திருக்கிறதாகத் தோன்றுகிறது என்று ஆசாரியனுக்கு அறிவிக்கக்கடவன். அப்பொழுது வீட்டிலுள்ள யாவும் தீட்டுப்படாதபடிக்கு, ஆசாரியன் அந்தத்தோஷத்தைப் பார்க்கப் போகுமுன்னே வீட்டை ஒழித்துவைக்கும்படி சொல்லி, பின்பு வீட்டைப் பார்க்கும்படி போய், அந்தத் தோஷம் இருக்கிற இடத்தைப் பார்க்கக்கடவன். அப்பொழுது வீட்டுச் சுவர்களிலே கொஞ்சம் பச்சையும் கொஞ்சம் சிவப்புமான குழி விழுந்திருந்து, அவைகள் மற்றச் சுவரைப்பார்க்கிலும் பள்ளமாயிருக்கக் கண்டால், ஆசாரியன் வீட்டைவிட்டுப் புறப்பட்டு வாசற்படியிலே வந்து, வீட்டை ஏழுநாள் அடைத்துவைத்து, ஏழாம்நாளிலே திரும்பப் போய்ப்பார்த்து, தோஷம் வீட்டுச் சுவர்களில் படர்ந்ததென்று கண்டால், தோஷம் இருக்கும் அவ்விடத்துக் கல்லுகளைப் பெயர்க்கவும், பட்டணத்துக்குப் புறம்பே அசுத்தமான ஒரு இடத்திலே போடவும் அவன் கட்டளையிட்டு, வீட்டை உள்ளே சுற்றிலும் செதுக்கச்சொல்லி, செதுக்கிப்போட்ட மண்ணைப் பட்டணத்துக்குப் புறம்பே அசுத்தமான ஒரு இடத்திலே கொட்டவும், வேறே கல்லுகளை எடுத்துவந்து, அந்தக் கல்லுகளுக்குப் பதிலாகக் கட்டி, வேறே சாந்தை எடுத்து வீட்டைப்பூசவும் கட்டளையிடுவானாக. கல்லுகளைப் பெயர்த்து, வீட்டைச் செதுக்கி, நவமாய்ப் பூசினபின்பும், அந்தத் தோஷம் திரும்ப வீட்டில் வந்ததானால், ஆசாரியன் போய்ப் பார்க்கக்கடவன். தோஷம் வீட்டில் படர்ந்ததானால், அது வீட்டை அரிக்கிற குஷ்டம். அது தீட்டாயிருக்கும். ஆகையால் வீடுமுழுவதையும் இடித்து, அதின் கல்லுகளையும், மரங்களையும், அதின் சாந்து எல்லாவற்றையும் பட்டணத்துக்குப் புறம்பே அசுத்தமான இடத்திலே கொண்டுபோகவேண்டும். வீடு அடைக்கப்பட்டிருக்கும் நாட்களில் அதற்குள் பிரவேசிக்கிறவன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான். அந்த வீட்டிலே படுத்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன். அந்த வீட்டிலே சாப்பிட்டவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன். ஆசாரியன் திரும்பவந்து, வீடு பூசப்பட்டபின்பு வீட்டிலே அந்தத் தோஷம் படரவில்லை என்று கண்டானேயாகில், தோஷம் நிவிர்த்தியானபடியால், ஆசாரியன் அந்த வீட்டைச் சுத்தம் என்று தீர்க்கக்கடவன். அப்பொழுது வீட்டிற்குத் தோஷங்கழிக்க, இரண்டு குருவிகளையும், கேதுருக்கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் எடுத்து, ஒரு குருவியை ஒரு மண்பாண்டத்திலுள்ள ஊற்றுநீரின்மேல் கொன்று, கேதுருக்கட்டையையும், ஈசோப்பையும், சிவப்புநூலையும், உயிருள்ள குருவியையும் எடுத்து, இவைகளைக் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலும் ஊற்று நீரிலும் தோய்த்து, வீட்டின்மேல் ஏழுதரம் தெளித்து, குருவியின் இரத்தத்தினாலும், ஊற்றுநீரினாலும், உயிருள்ள குருவியினாலும், கேதுருக்கட்டையினாலும் ஈசோப்பினாலும், சிவப்புநூலினாலும் வீட்டிற்குத் தோஷங்கழித்து, உயிருள்ள குருவியைப் பட்டணத்துக்குப் புறம்பே வெளியிலே விட்டுவிட்டு, இப்படி வீட்டிற்குப் பிராயச்சித்தம் செய்யக்கடவன். அப்பொழுது அது சுத்தமாயிருக்கும். இது சகலவித குஷ்டரோகத்துக்கும், சொறிக்கும், வஸ்திரக் குஷ்டத்துக்கும், வீட்டுக் குஷ்டத்துக்கும், . தடிப்புக்கும், அசறுக்கும், வெள்ளைப்படருக்கும் அடுத்த பிரமாணம். குஷ்டம் எப்பொழுது தீட்டுள்ளது என்றும், எப்பொழுது தீட்டில்லாதது என்றும் தெரிவிப்பதற்குக் குஷ்டரோகத்துக்கு அடுத்த பிரமாணம் இதுவே என்றார். ( லேவியராகமம் 14:34-57 )
கடவுளுடைய சட்டங்களை எப்படிப்பட்ட மடத்தனமான சட்டங்களாக சித்தரித்திருக்கின்றார்கள் என்று பார்த்தீர்களா சகோதரர்களே! மேலே சொன்னது போல் வீட்டுக்கு குஷ்டரோகம் வரும், ஆடைகளுக்கு குஷ்டரோகம் வரும் என்று வேறு எவராவது சொன்னால் 'இவனுக்கு பைத்தியம் பிடித்துள்ளது' என்று சொல்லும் நாம், அதை விட மிக மிக மடத்தனமாக - முட்டாள்தனமாக உளரும் இந்த பைபில் வசனங்களை மட்டும், இந்த அண்ட சராசரங்களை எல்லாம் படைத்து பரிபாலித்துவரும் இறைவனின் வார்த்தைகள்' என்று எப்படி நம்பமுடியும்? சிந்திக்க வேண்டாமா?
உலகிலேயே அதிகமான நாத்திகர்களை உண்டாக்கிய மதம் எதுவென்றால் அது கிறிஸ்தவமே! காரணம் இது போண்ற மடத்தனமான பைபிள் வசனங்களே! கடவுளே இப்படியெல்லாம் போதிப்பாரா? என்று அவர்கள் தங்கள் சிந்தனையை சுழற்றும்போது தான் 'கடவுளே இல்லை' என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றார்கள். இது போன்ற வசனங்களைப் பார்த்து யாருக்குத்தான் சந்தேகம் வராது சகோதரர்களே!

வீட்டுக்கு குஷ்டரோகம் வந்தால் அந்த இடம் கலர் கலாரா இருக்குமாம், மற்ற சுவர்களைக் காட்டிலும் வித்தியாசமாக இருக்குமாம், வீட்டுக்கு வந்த அந்த நோயை கண்டுபிடிப்பதற்கான டாக்டர்கள் ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த ஆசாரியர்களாம், அவர்களிடம் தான் ட்ரீட்மென்ட எடுக்கச் சொல்லி முறையிட வேண்டுமாம், அப்படி வீட்டுக்கு குஷ்டம் வந்தது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த வீட்டை ஏழு நாள் அடைத்து வைக்க வேண்டுமாம், குஷ்ட ரோகம் வந்த அந்த வீட்டில் பெயர்த்தெடுக்கப்பட்ட கற்களை அசுத்தமான இடத்தில் தான் போடவேண்டுமாம், வீட்டு குஷ்டரோக டாக்டர்களான ஆசாரியன் அதற்கான ட்ரீட்மென்ட் எடுத்தும், அதையும் மீறி குஷ்டரோகம் வந்தது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த வீட்டையே இடித்து அந்த கல்லையும், மரங்களையும் ஊருக்கு வெளியே அசுத்தமான இடத்தில் போடவேண்டுமாம், அப்படி குஷ்டம் வந்த வீட்டுக்குள் எவனாவது சென்றிருந்தால் அவனுக்கு மாலை வரை தீட்டாம், அவன் உடுத்தின உடைகளை கழுவவேண்டுமாம், அந்த வீட்டில் எவனாவது சாப்பிட்டிருந்தால் அவனும் தனது உடையை கழுவவேண்டுமாம், இதை எல்லாம் மீறி அந்த வீட்டுக்கான தோஷம் கழிக்கிறதற்கு சில வழிமுறைகளும் இருக்கின்றதாம்; என்று இப்படி ஜோக்குகள் அடுக்கிக்கொண்டே போகின்றது...

விஞ்ஞானம் வளர்ந்த இந்த இருபதாம் நூற்றாண்டில், பைபிளின் இந்த அற்புதமான கண்டுபிடிப்பை யாராவது நிரூபிக்க முடியுமா? இதை எல்லாம் எப்படி இறைவனின் வசனங்கள் என்று நம்பமுடியும்? சிந்தித்துப் பாருங்கள் கிறிஸ்தவர்களே!

இதே போல் அநேக தமாஷான சட்டங்களும், குறிப்பாக மக்களை மடையர்களாக்கி அதன் மூலம் பிழைப்பு நடத்தும் புரோகிதர்களான - குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த - ஆசாரியர்களுக்கு பிஸினஸ் (Business) வாய்ப்புகளுக்கான வழிகளும் லேவியராகமத்தில் மட்டுமல்லாது பைபிளின் பல இடங்களிலும் காணப்படுகின்றது. இவை அனைத்தையும் கடவுளே போதித்ததாக யூத புரோகிதர்கள் எண்ணற்ற பொய்யான சட்டங்களை எழுதிவைத்துள்ளனர். இறைவன் நாடினால், அந்த அத்தனை தவறுகளும் தொடர்ந்து எமது தளத்தில் வெளிவரும்.

அவர்களில் (இஸ்ரவேலர்களில்) ஒரு பகுதியினர் உள்ளனர். வேதத்தில் இல்லாததை வேதம் என்று நீங்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக வேதத்தை வாசிப்பது போல் தமது நாவுகளை வளைக்கின்றனர். 'இது இறைவனிடம் இருந்து வந்தது' எனவும் கூறுகின்றனர். அது இறைவனிடம் இருந்து வந்ததல்ல. அறிந்து கொண்டே இறைவனின் பெயரால் பொய் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 3:78) .
.

கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here
.
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here
.
இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.

Friday, July 11, 2008

பைபிளின் பலிக்காத சாபம்...!

எதார்த்தமான நிலைமைக்கு முரணான செய்திகள் கடவுளின் வார்த்தையில் இருக்க முடியாது. படித்தவுடன் மடத்தனமானதாகத் தோன்றும் செய்திகளும் கடவுளின் வார்த்தைகளில் இருக்க முடியாது - இருக்கவும் கூடாது. கடவுளின் வார்த்தைகளில் இத்தகைய குறைபாடுகள் இருக்கலாகாது என்பதை பைபிளும் கூட ஒப்புக்கொள்கின்றது.

'ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும்போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை, அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான், அவனுக்கு நீ பயப்படவேண்டாம்' - உபாகமம் 18:22

பைபிளே ஒத்துக்கொள்ளும் இந்தத் தகுதி பைபிளுக்கு இருக்கின்றதா? இதை நாம் ஆராய்வோம்.


பலிக்காத சாபம்
கடவுள் ஆதாமையும் அவருக்குத் துணையாக ஏவாளையும் படைத்தான். ஒரு குறிப்பிட்ட மரத்தின் கணிகளை மட்டும் உண்ணக்கூடாது என்று அவர்களுக்கு கடவுள் தடை விதித்திருந்தான். அவர்களிருவரும் கடவுளின் இந்தக் கட்டளையை மீறி அந்தக் கணியை உண்டார்கள்.

இந்தச் சம்பவத்தை ஒட்டி, பைபிள் கூறும் சில விஷயங்களை மேற்கண்ட அளவுகோலால் அளந்து பார்க்கும் போது பைபிள் இறைவேதத்திற்கான தகுதியை இழந்து விடுகின்றது என்பதை எவரும் உணரலாம். பைபிள் கூறுகின்றது :

அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன். வேதனையோடே பிள்ளை பெறுவாய் (ஆதியாகமம் 3:16)


கர்த்தரின் கட்டளையை மீறியதற்காகக் கடவுள் இட்ட சாபம் இது!
இது எத்தனை வகைகளில் பொருந்தாமல் போகின்றது என்பதை உங்கள் அறிவால் உரசிப்பாருங்கள் நண்பர்களே!

பெண்களுக்குப் பிரசவ வலி ஏற்படுகின்றது என்பது உன்மைத்தான். கடவுள் சொல்லாவிட்டாலும் கூட இது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அதற்குச் சொல்லப்படும் காரணம் சரியா? பொருத்தமானதுதானா என்பதே ஆராயவேண்டிய விஷயம்.


1. கடவுள் கட்டளையை மீறி, விலக்கப்பட்ட கணியை உண்டதற்காகத்தான் இந்தச் சாபம் என்றால் கட்டளையை மீறியது ஏவாள் மட்டுமல்லவே? ஆதாமும் கூட கட்டளையை மீறியவர் தாமே! பாவத்தில் சமபங்கு கொண்ட அவருக்கும் மற்ற ஆண்களுக்கும் ஏன் பிரசவமோ பிரசவ வலியோ ஏற்படுவதில்லை?

2. ஏவாள் கடவுளின் கட்டளையை மீறி கணியை உண்டதனால் அவருக்கு மட்டும்தான் பிரசவ வலி ஏற்பட்டிருக்க வேண்டும். அந்தப் பாவத்தில் சம்பந்தப்படாத மற்ற பெண்களுக்கும் ஏன் பிரசவ வலி ஏற்பட வேண்டும்?

3. பெற்றோரின் குற்றம் பிள்ளைகளைச் சேரும் என்று கிறிஸ்தவ உலகம் சமாளிக்குமானால் ஏவாள் பெற்றெடுத்த ஆண்களுக்கும் அந்தக் குற்றத்தில் பங்கு இருக்க வேண்டுமே? ஏவாளின் சந்ததிகளான ஆண்களுக்கு அந்த வலி ஏற்படுவதில்லையே அது ஏன்?

4. தாயின் தவறில் அவரது பெண் சந்ததிகளுக்கும், தந்தையின் தவறில் அவரது ஆண் சந்ததிகளுக்கும் தான் பங்குண்டு என்று கிறிஸ்தவ உலகம் தங்களின் கோட்பாட்டுக்கு விளக்கமளிப்பார்களானால் ஏவாள் பெற்றெடுத்த எல்லாப் பெண்களுக்கும் இந்த வலி ஏற்பட வேண்டுமே? மலடிகளுக்கும் மலட்டு ஆண்களை மணந்துக் கொண்ட பெண்களுக்கும் இந்த வலி ஏற்படுவதில்லையே? அப்படியாயின் கடவுளின் சாபம் என்னாவது? கிறிஸ்தவக் கோட்பாடுதான் என்னாவது? பிரசவிக்காத பெண்களுக்கு அந்தப் பாவத்தில் பங்கில்லையா? அவர்கள் பாக்கியம் செய்து விட்டவர்களா? அல்லது அவர்கள் தாய் வயிற்றில் பிறக்காமல் தாமாகத் தோண்றியவர்களா?

கிறிஸ்தவ கன்னியாஸ்திரீகளின் நிலையென்ன? பைபிள் கொள்கை என்னாவது? சிந்திக்க வேண்டாமா?

5. பாவத்தின் நிமித்தம் கடவுள் இட்ட சாபம் தான் பிரசவ வலி என்றால் மனித இனத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டும் தான் அந்த வலி இருக்க வேண்டும். ஆடு, மாடு உள்ளிட்ட பிரசவிக்கும் அனைத்து உயிரினங்களும் பிரசவ வலியால் துடிக்கின்றனவே! அது ஏன்? எல்லா ஜீவராசிகளின் தாய்களும் கர்த்தரின் கட்டளைகளை மீறி விலக்கப்பட்ட கணியை உண்டு விட்டனவா?

இப்படி அடுக்கடுக்கான கேள்விகளை இந்த வசனம் எழுப்பத்தூண்டுகிறது. கர்த்தர் சொன்ன பிரகாரம் எல்லாப் பெண்களுக்கும் (மலடிகள் உட்பட) பிரசவ வலி எற்படாததால் இது கள்ளத் தீர்க்கதரிசி தன் தணிகரத்தினாலே உண்டு பண்ணிச் சொன்னது என்பது தெளிவாகிறதல்லவா?

இந்தக் கேள்விகளுக்கான விடையைக் கிறிஸ்தவ உலகம் சிந்திக்கட்டும்! அவர்களால் இந்தக் கேள்விகளுக்கு நியாயமான விடையளிக்கவே முடியாது. கள்ளத் தீர்க்கதரிசிகள் உண்டு பண்ணிச் சொன்னவைகளும் பைபிளில் உள்ளன என்ற உன்மையை அவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.
.

தொடரும்....
கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here.
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here
.
இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here.

Monday, July 07, 2008

ஆடைகளுக்கு குஷ்டரோகம் வருமாம் - பைபிள் கூறுகின்றது

தொழுநோய் என்று சொல்லப்படும் குஷ்டரோகம் மனிதனுக்கு ஏற்படும் என்று கூறினால் அதை நம்பலாம். ஆடு மாடுகளுக்கு ஏற்படும் என்று கூறினால் கூட நம்பலாம். அணிகின்ற ஆடைகளுக்கும் தொழுநோய் ஏற்படும் என்று எவரேனும் சொன்னால் அறிவுடைய எவராவது நம்புவார்களா? நம்ப முடியுமா? அப்படிச் சொல்பவனின் அறிவில் தான் ஏதோ ரோகம் உள்ளது என்றே கூறுவார்கள்.

ஆனால் பைபிள், ஆடைகளுக்கும் தொழுநோய் ஏற்படும் என்று கூறுவதுடன் அதற்கான வைத்திய முறையையும் (?) கூறுகிறது. இதோ பைபிள் கூறுவதை கேளுங்கள்:

''47. ஆட்டுமயிர் வஸ்திரத்திலாவது, பஞ்சுநூல் வஸ்திரத்திலாவது,

(The garment also that the plague of leprosy is in, whether it be a woolen garment, or a linen garment)

48. பஞ்சுநூல், அல்லது ஆட்டுமயிரான பாவிலாவது, ஊடையிலாவது, ஒரு தோலிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது குஷ்டதோஷம் தோன்றி,
49. வஸ்திரத்திலாவது, தோலிலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது குஷ்டரோகம் பச்சையாயாவது சிவப்பாயாவது காணப்பட்டால் அது குஷ்டமாயிருக்கும் அதை ஆசாரியனுக்குக் காண்பிக்கவேண்டும்.
And if the plague be greenish or reddish in the garment, or in the skin, either in the warp, or in the woof, or in any thing of skin; it is a plague of leprosy, and shall be shewed unto the priest:

50. ஆசாரியன் அதைப்பார்த்து, ஏழுநாள் அடைத்துவைத்து,
And the priest shall look upon the plague, and shut up it that hath the plague seven days:

51. ஏழாம் நாளிலே அதைப் பார்க்கக்கடவன். வஸ்திரத்திலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது அது அதிகப்பட்டிருந்தால், அது அரிக்கிற குஷ்டம். அது தீட்டாயிருக்கும்.
52. அந்தத் தோஷம் இருக்கிற ஆட்டுமயிரினாலும் பஞ்சுநூலினாலும் செய்த வஸ்திரத்தையும் பாவையும், ஊடையையும், தோலினால் செய்த எந்தவித வஸ்துவையும் சுட்டெரிக்கக்கடவன். அது அரிக்கிற குஷ்டம். ஆகையால் அக்கினியில் சுட்டெரிக்கப்படவேண்டும்.

53. வஸ்திரத்தின் பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது, அந்த தோஷம் அதிகப்படவில்லை என்று ஆசாரியன் கண்டால்,

54. அப்பொழுது ஆசாரியன் அதைக் கழுவச்சொல்லி, இரண்டாந்தரம் ஏழுநாள் அடைத்துவைத்து,


55. அது கழுவப்பட்டபின்பு, அதைப் பார்க்கக்கடவன். அந்தத் தோஷம் அதிகப்படாதிருந்தாலும், அது நிறம் மாறாததாயிருந்தால் தீட்டாயிருக்கும். அக்கினியில் அதைச் சுட்டெரிக்கவேண்டும். அது அவ்வஸ்திரத்தின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் உருவ அரிக்கும்.

56. கழுவப்பட்டபின்பு அது குறுகிற்றென்று ஆசாரியன் கண்டானேயாகில், அதை வஸ்திரத்திலாவது, தோலிலாவது, பாவிலாவது, ஊடையிலாவது இராதபடிக்கு எடுத்துப்போடவேண்டும்.

57. அது இன்னும் வஸ்திரத்திலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது காணப்பட்டால், அது படருகிற தோஷம். ஆகையினால் அது உள்ளதை அக்கினியில் சுட்டெரிக்கவேண்டும்.

58. வஸ்திரத்தின் பாவாவது, ஊடையாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவாவது கழுவப்பட்டபின்பு, அந்தத் தோஷம் அதைவிட்டுப் போயிற்றேயானால், இரண்டாந்தரம் கழுவப்படவேண்டும். அப்பொழுது சுத்தமாயிருக்கும்.

59. ஆட்டு மயிராலாகிலும் பஞ்சுநூலாலாகிலும் நெய்த வஸ்திரத்தையாவது, பாவையாவது, ஊடையையாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவையாவது, சுத்தமென்றாவது தீட்டென்றாவது தீர்க்கிறதற்கு, அதினுடைய குஷ்டதோஷத்துக்கடுத்த பிரமாணம் இதுவே என்றார்.
- லேவியராகமம் 13:47 - 59

இவை அனைத்தும் பைபிளில் இடம் பெற்றுள்ள வாசகங்கள்.

குஷ்டரோகமும் அதற்கான பரிகாரமும் எவ்வளவு அற்புதமாக விளக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டு வியப்பு ஏற்படுகின்றதல்லவா? உங்கள் ஆடைகளில் சிவப்பாக, பச்சையாக ஏதேனும் தென்படுகிறதா என்று சோதித்துக் கொள்ளுங்கள்! அதைக்கூட நீங்கள் சோதிக்க முடியாதாம். பக்தர்களிடம் காணிக்கைப் பெற்று வாழ்ந்து வரும் புரோகிதக்கும்பலைச் சேர்ந்த 'ஆசாரியன்' தான் சோதிக்க வேண்டுமாம். இவர்கள் தங்கள் வருமானங்களுக்கா எப்படியெல்லாம் யோசித்திருக்கின்றார்கள் என்று பார்த்தீர்காளா? பாவம் பக்தர்கள்.

கர்த்தரின் பெயரால் சொல்லப்பட்டுள்ள இந்த அபார கண்டுபிடிப்பு கர்த்தரே சொன்னதா? அல்லது கர்த்தரின் பெயரால் இட்டுக்கட்டப்பட்டதா? யோசிக்க வேண்டாமா?

விஞ்ஞானம் வளர்ந்த 20ம் நூற்றான்டில் பைபிளின் இந்த அற்புதமான கண்டுபிடிப்பை யாராவது நிரூபிக்க முடியுமா?

சிந்தியுங்கள் கிறிஸ்தவர்களே!
தொடரும்...
.
.
.
.